tamilnadu

img

ரசாயன கழிவு நீரால் விவசாய நிலங்கள் பாதிப்பு தனியார் தொழிற்சாலையை மீண்டும் திறக்க முயற்சி புதுக்குடி மக்கள் கடும் எதிர்ப்பு

தஞ்சாவூர், செப்.3-  தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி யை அடுத்துள்ள புதுக்குடியில் தனி யார் ரசாயன தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்தது. அந்த தொழிற்சாலை யின் உள்ளே 11 ஆழ்துளைக் கிணறு கள் அமைத்தும், ரசாயன கழிவு நீரை முறையாக வெளியேற்றாமல் இருந்த தால் அருகில் இருந்த விவசாய நிலங் கள் பாதிக்கப்பட்டன.  இதனால் இப்பகுதி மக்கள் கொடுத்த புகாரை அடுத்து இந்த தொழிற் சாலையை அதிகாரிகள் ஆய்வு செய்து கடந்த ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதி மூடினார்கள். இதைத்தொடர்ந்து இந்த ஆலையை மீண்டும் திறப்பதற்காக ஆலை நிர்வாகத்தினர் முயற்சி செய்த னர். பொது மக்களுக்கும் ஆலை நிர்வா கத்தினருக்கும் இடையே கடந்த வாரம் பூதலூரில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் உடன்பாடு எட்டப்படவில்லை.  இந்நிலையில் இந்த ஆலை திங்கள்கிழமை மீண்டும் திறக்கப்பட இருந்தது. இதனை அறிந்த புதுக்குடி மக்கள் 500க்கும் மேற்பட்டோர் தஞ்சை- திருச்சி சாலையில் ஆலை யை முற்றுகையிட்டு போராட்டம் செய் வதற்காக ஊர்வலமாக வந்தனர். இதையடுத்து ஏராளமான காவல்துறை யினர் குவிக்கப்பட்டனர். தொழிற் சாலையை முற்றுகையிட்டு உள்ளே செல்ல முயன்ற 500க்கும் மேற்பட் டோரை தடுத்து நிறுத்தி, போராட்டத் தில் ஈடுபட்ட 19 பெண்கள் உள்பட 65 பேரை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செய்தனர். இது குறித்து போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்ததாவது, “புதுக்குடியில் இயங்கி வந்த ரசாயன தொழிற்சாலையால் இப்பகுதியில் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டன. இப்பகுதியை சேர்ந்த பலருக்கும் சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டு பலரும் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வரு கின்றனர். இந்த ஆலை மீண்டும் திறக் கப்பட்டால் காலவரையற்ற உண்ணா விரத போராட்டம் நடத்தப்படும் என்றார்.