தஞ்சாவூர், ஆக. 19- தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாட்டு பொதுக் கூட்டத்தில் ஆதித்தமிழர் கட்சி தலைவர் கு.ஜக்கையன் பேசியதாவது: உத்தப்புரத்தில் ஒரு செங்கல்லைக் கூட பெயர்க்க முடியாது என்று சாதி வெறியர்கள் சொல்லிவந்த நிலையில் அதை தகர்த்தெறிந்த மகத்தான வரலாற்றுப் பின்னணியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி உருவானது. இந்த அமைப்பு உருவாக்கப்பட்டு 12ஆண்டு களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக மிக அதிகமான தலையீடுகளை செய்துள்ளது.
சாதாரண சாதனையல்ல
25 ஆண்டுகளுக்கும் மேலாக உள் ஒதுக்கீடு கோரி அருந்ததிய இயக்கங் கள், அந்த மக்கள் பல்வேறு போராட்டங் களை நடத்தியுள்ளோம். எளிய மக்க ளாகிய எங்களின் குரல் ஆட்சி யாளர்களை கொஞ்சம்கூட அசைத்துப் பார்க்கவில்லை. கடந்த 2007-ஆம் ஆண்டு 30 ஆயிரம் மக்களைத் திரட்டி தீண்டாமை ஒழிப்பு முன்னணி சென்னையில் மிகப்பெரிய பேரணியை நடத்தியது. அதன் பிறகுதான் 3 சதவிகித இட ஒதுக்கீடு அருந்ததிய மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நேரத்தில் தலைவர் என்.வரதராஜன் அவர்களை நினைத்துப் பார்க்கிறேன். இது சாதாரண சாதனை அல்ல. கடந்த 2008-ஆம் ஆண்டுவரை மருத்துவப் படிப்பில் அருந்ததிய சமூகத்திலிருந்து வருடத்திற்கு வெறும் 5 பேர்தான் சேர முடிந்தது. உள்ஒதுக்கீடு வழங்கப்பட்ட பிறகு 2009-ஆம் ஆண்டுமுதல் 60 மாண வர்கள் மருத்துவப் படிப்பில் படித்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகள் 600 மருத்துவர்கள் அருந்ததிய சமூ கத்திலிருந்து வந்திருப்பது சாதாரண விசயம் அல்ல. அதே போல வெறும் 6 பேருக்கு மட்டுமே வழக்கறிஞர் படிப்பு க்கு இடம் கிடைத்து வந்த நிலையில் 70 பேராக உயர்ந்து 10 ஆண்டுகளில் 700 வழக்கறிஞர்களை இந்த சமூகத் திலிருந்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி பெற்றுத் தந்துள்ளது.
அனைத்து சமூகத்தையும் திரட்டுகிற ஆற்றல்
அருந்ததியர் உள்ளிட்ட தலித் மக்கள் அனுபவித்து வந்த ஆண் நாய் வளர்க்கக்கூடாது உள்ளிட்ட எண்ணற்ற தீண்டாமைக் கொடுமைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்த பெருமை தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கு உண்டு. தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தை தீண்டாமை ஒழிப்பு முன்னணி அணுகிய விதம்தான் பெருமைக்குரிய விசயம். நான் ஆதித் தமிழர் கட்சி என்ற அமைப்பை நடத்தி வருகிறேன். நான் அழைத்தால் எனது சமூகத்தைச் சேர்ந்த வர்கள் மட்டும்தான் வருவார்கள். இதே போல பறையர், தேவேந்திரகுல வேளாளர், புதிரை வண்ணார், குறவர் என அந்தப் பகுதியினர் நடத்தும் போராட்டங்களுக்கு அந்த பகுதியினர் மட்டும்தான் வருவார்கள். ஆனால், தீண்டாமை ஒழிப்பு முன்னணி அழைத்தால் மட்டும்தான் அத்தனை ஒடுக்கப்பட்ட சமூக மக்களும் ஒன்றாகத் திரளுவார்கள். ஒடுக்கப்பட்ட மக்களை மட்டுமல்ல. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அத்தனை சமூகத்து மக்களையும் திரட்டுகின்ற ஆற்றல் தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கும் மார்க்சிஸ்ட் கட்சிக்கும் தான் உண்டு. நீண்ட நாட்களுக்குப் பிறகு தஞ்சை நகரத்துக்குள் நடக்கும் பேரணி இது. நாம் பேரணியாக வரும்போது ஒருபக்கம் இந்து முன்னணியின் மத வெறி அரசியலை முன்னிறுத்தும் சுவர் விளம்பரத்தை பார்த்தோம். மறுபக்கம் நமது பேரணி. அப்பொழுதுதான் நினைத்தேன். பார்ப்பனியத்திற்கு, இந்துத்துவத்திற்கு எதிராக சம்மட்டி அடி கொடுக்கிற ஆற்றல், வல்லமை கம்யூனிஸ்ட்டுகளுக்கு மட்டும்தான் உண்டு என்பதை. எத்தனையோ போராட்டங்களை தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்தி யிருந்தாலும் இன்னமும் நவீன வடிவங்களில் தீண்டாமை இருந்து கொண்டுதான் இருக்கிறது. கைகளில் கயிறு கட்டுவது உள்ளிட்ட வித விதமான தீண்டாமை நாளுக்குநாள் முளைத்துக்கொண்டே இருக்கிறது. சாதி அடக்குமுறைக்கு எதிராக இன்னும் லட்சம்பேர் திரளவேண்டிய அவ சியம் இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்க ளை மட்டுமல்ல. அனைத்துப் பகுதி மக்களையும், ஒடுக்கப்பட்ட மக்க ளிலேயே கண்டுகொள்ளப்படாமல் இருந்த புதிரை வண்ணார், குறவர், பன்னியாண்டி சமூகம் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினரையும் அர வணைத்துச் செல்கின்ற அணுகு முறைதான் இன்றைக்கு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஜெய் சீதாராம் முழக்கம் வெல்லும்
இந்தியா முழுவதும் இதுபோன்ற ஒரு எழுச்சியை இணைத்துச் செல்கின்ற பேராற்றல் கம்யூனிஸ்டுகளுக்கு மட்டும்தான் உள்ளது. ஜெய் ஸ்ரீராம் என்ற முழக்கத்திற்கு எதிராக ஜெய் சீதாராம் (சிபிஎம் பொதுச் செயலாளரை குறிப்பிடுகிறார்) என்ற முழக்கம் வெல்லும் என்று எங்களைப்போன்ற தலித் இயக்கங்களை நடத்துகின்றவர்கள் நம்புகிறோம். உண்மையாகவே கொள்கை ரீதியான கூட்டாளிகளாக உங்களோடு இணைந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். கடந்த காலங்களில் நாம் உரத்து குரல் கொடுத்தால் அதை காது கொடுத்துக் கேட்கின்ற கலைஞரைப் போன்ற நல்ல முதல்வர்கள் இருந்தார்கள். ஆனால், இன்றைக்கு காதுகொடுத்து கேட்கும் நிலையில் ஆட்சியாளர்கள் இல்லை. ஆனால் அவர்களுக்கு கேட்கின்ற மொழியில் சொல்லும் ஆற்றல் இந்த மாநாட்டிற்கு உண்டு. மாநாடு முன்னெடுத்து இருக்கிற ‘சாதியம் தகர்ப்போம், மனிதம் வளர்ப்போம்’ என்ற முழக்கம் வெல்லட்டும் என்று வாழ்த்துகிறேன்.
மாநாட்டுச் செய்திகள், படங்கள்: சு.மதியழகன், ஜகுபர் அலி, ஜெ.பொன்மாறன்