தஞ்சாவூர்,ஜூன் 16- கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் அமைக்கும் மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கவில்லை என முதலமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைக்கும் மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி 40 நாட்களாகியும் இன்னும் அனுமதி தரவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகாவது ஆளுநர் ஆர்.என். ரவி மாறுவார் என நினைத்தோம். ஆனால் அவர் இன்னும் மாறவில்லை,பல்கலைக்கழகம் அமைப்பது குறித்து அவருக்குப் பலமுறை நினைவூட்டப்பட்டது ஆனால் அவர் உயர்க்கல்வித்துறை அமைச்சரைச் சந்திக்க மறுத்துவிட்டார் என முதலமைச்சர் தெரிவித்தார்