கும்பகோணம்: நாச்சியார்கோவில் குத்துவிளக்கு தொழிலாளர்களுக்கு நிபந்தனை யற்ற வங்கி கடன் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் உலக பிரசித்தி பெற்ற குத்துவிளக்கு தொழிலில் ஏராளமானோர் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் குத்து விளக்கு தொழிலில் ஈடுபட்டு வரும் நாச்சியார்கோவில் குத்துவிளக்கு லேத் தொழிலா ளர்கள் சங்கம் துவக்க நிகழ்வு நாச்சியார்கோவில் சரவணன் தலைமையில் நடைபெற்றது. சிஐடியு தஞ்சை மாவட்டச் செயலாளர் சி. ஜெயபால் சங்கத்தின் விதிமுறைகளையும் தொழி லாளர்களின் பாதுகாப்பு குறித்தும் விளக்கிப் பேசினார். கூட்டத்தில் சங்கத் தலைவராக கீர்த்திவாசன், செயலாளராக வினோத், பொருளாளராக சிவ. சக்திவேல், துணைத்தலை வராக குமரன், துணைச் செயலாளராக பழனிச்சாமி கௌரவத் தலைவராக சரவணன் ஆகியோர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். குத்துவிளக்கு தொழிலாளர் வாழ்க்கை மேம்பாட்டிற்காக தேசிய வங்கிகளில் நிபந்தனையற்ற வங்கி கடன் வழங்க வேண்டும். தொழிலா ளர்களின் பணிக்கு இடையூறு இல்லாமல் தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் அந்தோணிராஜ், ரகுநாதன், பசுபதி, பவுல்ராஜ், அருள்ஜின்னா, அசோக், சுபாஷ், சௌந்தர்ராஜன், மணிவண்ணன் ஆண்டனி, முருகானந்தம், பார்த்திபன், ராஜேந்திரன், சுந்தர்ராஜ், மணிகண்டன், விக்னேஷ் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.