tamilnadu

img

மீனவர் குடும்பங்களுக்கு  அரிசி வழங்கல்  

 தஞ்சாவூர்: தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் அரிசி அரவை ஆலை முகவர்கள் சார்பில் கொரோனா நிவாரண உதவி யாக 20 மெ.டன் அரிசி தஞ்சாவூர் மண்டல கொரோனா தடுப்புக்குழு கண்காணிப்பு அலுவலர் எம்.எஸ்.சண்முகம் மற்றும் ஆட்சியர் ம.கோவிந்த ராவ் ஆகியோரிடம் வழங்கப்பட்டது. பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தினர் மற்றும் மீனவர்கள் குடும்பத்தினருக்கு உதவிடும் வகையில், 2000 குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி வீதம், 2000 பைக ளில் 20 மெட்ரிக் டன் அரிசி பட்டுக்கோட்டை வட்டம், அதிராம் பட்டினம் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் கதிரேசன், அரிசி அரவை ஆலை முகவர்கள் சங்கத் தலைவர் விஜயகுமார், செயலாளர் சதீஷ், பொருளாளர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

;