tamilnadu

img

மீனவர் சங்க ஆலோசனைக் கூட்டம்

 தஞ்சாவூர், செப்.26- தஞ்சை மாவட்ட நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர் சங்க அவசர ஆலோசனை கூட்டம், புதன்கிழமை அன்று மல்லிப் பட்டினம் வினோத் பிரியா மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு விசைப்படகு மீனவர் சங்க தலைவர் ஏ.தாஜு தீன், நாட்டுப்படகு மீனவர் சங்கம் ஜெயபால் ஆகியோர் தலைமை வகித்தனர். நாட்டுப்படகு மீனவர் சங்கம் அதிரை நாக ராஜ், வி. பழனிவேலு, விசைப்படகு மீனவர் சங்கம் ராஜ மாணிக்கம், வடுகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இக்கூட்டத்தில், “வரும் காலங்களில் இரண்டு சங்கங்க ளும் ஒன்றாக, தஞ்சை மாவட்ட மீனவர்கள் என்ற அடிப்படை யில் இணைந்து செயல்படுவது எனத் தீர்மானிக்கப்பட்டது. மேலும் நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர்கள் இடையே அடிக்கடி பிரச்சனையை ஏற்படுத்தும் தடை செய்யப்பட்ட எந்த ஒரு வலைகளையும் பயன்படுத்துவதில்லை எனவும், தற்போது அதுபோன்ற வலைகளை பயன்படுத்தி வரும் மீன வர்களை அணுகி, இதுபோன்ற தவறுகளை இனிமேல் செய்யக்கூடாது என வலியுறுத்துவது, மீறி செய்யும் பட்சத்தில் தயவு தாட்சண்யமின்றி கடும் நடவடிக்கை எடுப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.  மேலும், கடற்கரை ஓரங்களில் கடல் பாசி அள்ளுவதை உடன் நிறுத்த வேண்டும் எனவும், கடல்பாசி வாங்கும் நபரிடம் இதுகுறித்து அறிவுறுத்துவது எனவும், மீறும் பட்சத்தில் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுப்பது எனவும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணத் தொகை குறைவாக உள்ளதால், இரு தரப்பு மீனவர்களும் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரு கின்றனர். எனவே, அரசு காலம் தாழ்த்தாமல் மீனவர்கள் கோரி க்கையை ஏற்று நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.