tamilnadu

img

குடும்ப நல நீதிமன்றம் திறப்பு

 தஞ்சாவூர், அக்.19- தஞ்சாவூர் காந்திஜி சாலை சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை அன்று குடும்ப நல நீதிமன்றம் திறப்பு விழா நடைபெற்றது.  விழாவிற்கு தஞ்சாவூர் முதன்மை மாவட்ட நீதிபதி வி.திருஞானம் தலைமை வகித்து, துவக்க உரையாற்றுகையில், “குடும்பம் என்பது வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் முக்கியமானது. சிறு பிசிறு ஏற்பட்டாலும் அது சிதைந்து விடும்.  குடும்ப நலம் சிறக்கும் வகையில் நீதிமன்றம் செயல்பட வேண்டும். அதற்கு பொதுமக்கள், வழக்கறிஞர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்றார்.  முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி கே. கருணாநிதி வரவேற்றார். முன்னிலை வகித்த தஞ்சை மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை பேசினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ். மகேஸ்வரன், மகளிர் நீதிமன்ற அமர்வு நீதிபதி எம்.எழிலரசி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் துணைத் தலைவர் வி.கார்த்திகேயன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நிறைவாக தஞ்சை வழக்கறிஞர் சங்க செயலாளர் ஜி.கீர்த்திராஜ் நன்றி கூறினார்.