tamilnadu

img

குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தல்

தஞ்சாவூர், ஜன.28- அதிராம்பட்டினம் தக்வா பள்ளி வாசல் அருகில் திங்கட்கிழமை தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம், மனிதநேய மக்கள் கட்சி சார்பில், மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றை திரும்பப் பெற வலியுறுத்தி விழிப்பு ணர்வு மற்றும் கண்டனப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, அமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்புக்குழு தலை வர் முகமது சேக் ராவூத்தர் தலைமை வகித்தார். அமைப்பின் நிர்வாகிகள் எம்.நசுருதீன் சாலிகு, மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்கள்  சாதிக் பாட்சா, தமீம் அன்சாரி, அப்துல் ஜப்பார், அப்துல் அஜீஸ், அவ்வமைப்பின் அதிராம்பட்டி னம் பேரூர் பொறுப்புக்குழு தலைவர் நெய்னா முகமது, உறுப்பினர்கள் செய்யது புஹாரி, முகமது யூசுப், பீர் முகமது ஆகியோர் முன்னிலை வகித்த னர். மனிதநேய மக்கள் கட்சி மாநிலப் பொதுச்செயலாளர் பி.அப்துல் சமது, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில துணைச் செயலாளர் நெல்லை செ.சுந்தரவள்ளி, மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்புச்செயலாளர் தஞ்சை ஐ.எம் பாதுஷா, ராவியத் கண்டன உரை ஆற்றினர். கூட்டத்தில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சி.ஏ.ஏ) திரும்பப் பெறக் கோரி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுமாறு அரசை வலியுறுத்து வது, ஈழத்தமிழர்களையும், இஸ்லா மியர்களையும் வஞ்சிக்கும் மத்திய  அரசிற்கு துணை போகும் தமிழக அரசை வன்மையாகக் கண்டிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், பெண்கள் உட்பட 2 ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 

;