tamilnadu

தீப்பிடித்து எரிந்த மின் மாற்றி

 கும்பகோணம், செப்.26- கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் ரயில் நிலையம் ஆகிய முக்கிய பகுதியில் அருகே அமைந்துள்ளது சாந்தி நகர் குடியிருப்பு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடி யிருப்பு வாசிகள் வசித்து வருகின்றனர்.  இந்த நிலையில் சாந்தி நகரில் அமைந்துள்ள மின்மாற்றி யில் புதன்கிழமை இரவு பயங்கர சப்தத்துடன் தீப்பொறி பிழம்பு ஏற்பட்டது. இதனால் குடியிருப்பு வாசிகளின் வீடு களில் உள்ள விலையுயர்ந்த மின் சாதன பொருட்கள் பழுது ஏற்பட்டது. மேலும் அப்பகுதி உள்ள தர்மராஜ், சர்புதீன், சினேகம் ஆகியோர்களின் வீடுகளில் உள்ள மின் சாதன அளவீட்டு கருவி திடீரென்று தீ சுவாலை ஏற்பட்டு எரிந்து கருகின. இதனால் குடியிருப்பில் உள்ள ரூ 3 லட்சம் மதிப்புள்ள மின்சாதன பொருட்கள் பழுது ஏற்பட்டுள்ளது. இரவு முழுவதும் மின் தடை ஏற்பட்டு சிரமத்திற்கு பொது மக்கள் ஆளாகி உள்ளனர். .எனவே மின்மாற்றியை குடியிருப்பு பகுதியில் இருந்து அகற்றி அருகில் உள்ள பூங்காவிற்கு இடம் மாற்றம் செய்ய வேண்டும். இது போன்ற மின்மாற்றியில் தொடர்ந்து அடிக்கடி தீப்பொறி ஏற்பட்டு பொருட்கள் பழுதாகி வரு வதால் குடியிருப்பு பகுதியில் வாழும் மக்கள் அச்சம் தெரி வித்து வருகின்றனர். உடன் பாதுகாப்பான இடத்திற்கு மின் மாற்றியை மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.