தஞ்சாவூர், ஆக.5- கொரோனா ஊரடங்கு காலத்தில் ஊழி யர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கை களை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கம் சார்பில், டாஸ்மாக் தஞ்சை மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்க மா வட்டச் செயலாளர் கே.வீரையன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். இதில், சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், “பணியில் ஈடு பட்டுள்ள டாஸ்மாக் ஊழியர்களுக்கு, கொரோ னா காலத்தில் 50 லட்ச ரூபாய்க்கு காப்பீடு வழங்க வேண்டும்.
பணியில் உயிரிழந்த டாஸ்மாக் ஊழியர்களின் குடும்பத்தில் ஒருவ ருக்கு வேலை வழங்க வேண்டும். 15 ஆண்டுக ளுக்கு மேல் பணியாற்றும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நோய்த்தொற்று பரவாமல் தடுக்க கிருமி நாசினி, முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களையும், உயிர் காக்கும் மருந்து பொருட்களையும் வழங்க வேண்டும். ஊரடங்கு காலத்தில் ஊழியர்கள் மீது போட ப்பட்டுள்ள பொய் வழக்கை வாபஸ் பெற்று மீண்டும் பணி வழங்க வேண்டும்” என வலி யுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து டாஸ்மாக் மாவட்ட மேலாளரைச் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.