தஞ்சாவூர், மே 9- தஞ்சாவூர் மாவட்டம் திருக் காட்டுப்பள்ளியில் இயங்கி வரும் மதுக்கடையை இழுத்து மூட வேண் டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பூதலூர் வடக்கு ஒன்றியக் குழு கூட்டம், திருக்காட்டுப்பள்ளி கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கே.காந்தி தலைமை வகித்தார். சி.சிவசாமி, பி.முருகேசன், பி.கலைச்செல்வி, எஸ்.மெய்யழகன், ஆர்.உதய குமார், டி.ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் “திருக்காட்டுப் பள்ளி டாஸ்மாக் மதுக்கடையை உடனடியாக திறக்க கூடாது. இழுத்து மூட வேண்டும். கொரோ னா நோய்த்தொற்று கிராமத்திற் குள் பரவாமல் தடுத்து நிறுத்த வேண்டும். அனைத்து கிராமங்களி லும் குடிபோதையில் அடிதடி பிரச்சனை தொடங்கியிருப்பதை அரசு கவனத்தில் கொண்டு மதுக் கடைகளை மூட வேண்டும். இல்லை யெனில், மதுக்கடைகளை பூட்டு போட்டு கடையை மூடும் போராட் டம் விரைவில் நடைபெறும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.
ஆர்ப்பாட்டம்
மேலும் மார்க்சிஸ்ட் கட்சியின் மன்னார்குடி நகர குழு சார்பில் கட்சி அலுவலகம் அமைந்திருக்கும் ஆசாத் தெருவில் கருப்பு பேட்ச் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தி ற்கு நகரச் செயலாளர் எஸ் ஆறு முகம் தலைமை வகித்தார். நகர தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நகர செயலாளர் கே பிச்சை கண்ணு, தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கே காளிமுத்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நகர செயலாளர் மாரிமுத்து கௌந்தமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.