தஞ்சாவூர் மாவட்டம் திருப்பாலத்துறை வடக்கு குடியான தெருவில் இடிந்து விழும் நிலையில் இருந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மக்களின் கோரிக்கையை தொடர்ந்து ஆட்சியர் கோவிந்தராவ் உத்தரவின்பேரில் இடித்து அகற்றப்பட்டது. இப்பணியை பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன் பார்வையிட்டார்.