தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஊராட்சி ஒன்றிய தலைவர் சசிகலா ரவிசங்கர் திங்கள்கிழமை ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சடையப்பன், தவமணி, ஊராட்சி தலைவர் மல்லிகை வை.முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார். இதில் அம்மையாண்டி ஊராட்சியில், வாய்க்கால் மராமத்து பணியில் ஈடுபட்டு வந்த 100 க்கும் மேற்பட்ட நூறு நாள் திட்ட பெண் தொழிலாளர்களுக்கு தனது சொந்தப் பணத்தில் இருந்து முகக்கவசத்தை வழங்கினார்.