tamilnadu

img

இன்னம்பூர் ஊராட்சி மக்களுக்கு அடிப்படை வசதி கேட்டு ஆர்ப்பாட்டம் 

 கும்பகோணம், செப்.17-  தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட இன்னம்பூர் ஊராட்சியில் குடிநீர் சாலை வசதி ரேஷன் கடை உள்ளிட்ட வசதிகள் செய்து தரக்கோரி இன்னம்பூர் ஊராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செய லாளர் எஸ் செல்வராஜ் தலைமை வகித்தார் வெங்கடேசன் கணேசன் அய்யனான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மனோகரன் சின்னை.பாண்டியன் மாவட்ட குழு உறுப்பினர் நாகராஜன் குடந்தை ஒன்றிய செயலாளர் பி ஜேசுதாஸ் சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் பி.ராதா விதொச ஒன்றியக்குழு மாசிலா மணி மற்றும் கிளை பொறுப்பாளர்கள் பி.ஜெயராமன் மகா லிங்கம் ஏஜெயராமன் ராமச்சந்திரன், தங்கையன், ஜோதிபாசு, ராமர், பாலகுரு, மாதர் சங்க பொறுப்பாளர் கலா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  ஆர்ப்பாட்டத்தில் இன்னம்பூர் புளியம்பட்டி மற்றும் காந்தி நகர் திருவள்ளுவர் நகர் புளியம்படி காலனி தெருவில் குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும், புளியங்குடி முதல் திருப்புறம்பியம் வரை உள்ள தார் சாலை இருபக்கமும் உள்ள பள்ளத்தை சரி செய்திட வேண்டும், ரேஷன் கடையில் அனைத்து பொருட்களும் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டும், 100 நாள் வேலை அனைவருக்கும் கொடுக்க வேண்டும், ஊராட்சியில் உள்ள சுடுகாட்டு சாலைக்கு தார் சாலை அமைத்து மின் விளக்கு வசதி செய்து தர வேண்டும், இன்னம்பூர் விஏஓ அலுவலகத்திற்கு தினமும் விஏஓ வரு வதை உத்தரவாதம் செய்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தினர்.