tamilnadu

திருவள்ளுவர் சிலை அவமதிப்பு  சிபிஎம் கண்டனம்

தஞ்சாவூர் நவ.4-  திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவம் கடும் கண்டனத்திற்கு உரியது. குற்றம் செய்தோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டக்குழு வலியுறுத்தி உள்ளது.  இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ. நீலமேகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தஞ்சையை அடுத்த பிள்ளையார்பட்டி திருவள்ளுவர் தெருவில் அமைக்கப்பட்டுள்ள, திருவள்ளுவர் சிலையை சமூக விரோதிகள் அவமதிப்பு செய்துள்ளனர்.  அப்பகுதியில் சாதி, மத ரீதியான எந்தவித பிரச்சனை களும் இல்லாத நிலையில், மோடி நிகழ்ச்சியில் திருவள்ளுவர் படத்திற்கு காவி உடையும், பட்டையும் அணிவிக்கப்பட்டு சர்ச்சை எழுந்துள்ள நிலையில், இது போன்ற சம்பவம் நடந்துள்ளது. சமூக பதற்றத்தை உருவாக்கும் நோக்கத்து டன் நடைபெற்ற செயலாக இருக்கலாம் எனஅய்யம் ஏற்பட்டுள்ளது.  இவ்விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல் துறை விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்ற வாளிகளை கண்டறிந்து அவர்களை சட்ட நடவடிக்கைக ளுக்கு உட்படுத்த வேண்டும். திருவள்ளுவர் சிலைக்கு பாது காப்பு வழங்க வேண்டும்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை மாவட்ட குழு வலியுறுத்தியுள்ளது.  இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.செந்தில்குமார், ஒன்றியச்செய லாளர் எம்.மாலதி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலர் கே.அருளரசன், சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பி னர் கே.பன்னீர்செல்வம் ஆகியோர் திருவள்ளுவர் சிலை அமைப்பு குழு தலைவராக செயல்பட்ட என்.தெட்சிணாமூர்த்தியை சந்தித்து நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தனர்.