கும்பகோணம், ஜூன் 11- தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலுகாவிற்கு உட்பட்ட திருநரையூர் ஊராட்சி அன்வர்நகரில் 47 வயது ஆண் ஒருவர் சவுதியில் வேலை பார்த்து வந்தார். சவுதியில் ஊரடங்கு உத்தரவினால் ஒரு மாத காலம் வீட்டிலிருந்து கடந்த ஜூன் 4-ஆம் தேதி சென்னை திரும்பினார். அப்போது சென்னை யில் கொரோனா தொற்று இருக்கிறதா என சோதனை செய்வ தற்காக தனியார் ஹோட்டலில் கடந்த 4 நாட்களாக தங்க வைக்கப்பட்டார். இந்நிலையில் ஞாயிறு காலையும் ரத்த மாதிரி எடுத்து சோதனைக்கு அனுப்பி விட்டு நள்ளிரவு ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து வீட்டில் கொண்டு வந்து விட்டனர். ஆனால் திடீரென்று திங்கட்கிழமை காலை சோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது என தகவல் வந்தது. இத னால் திருநரையூர் அன்வர் நகரில் வீட்டிலிருந்த நபரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.