தஞ்சாவூர், ஆக.1- தஞ்சை மாவட்டம் திருவையாறு அரசர் கல்லூரியில் 16ஆவது பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. ஆட்சியர் ஆ.அண்ணாதுரை மாணவர்களுக்கு பட்டங் களை வழங்கினார். நிகழ்ச்சியில் மொத்தம் 292 மாண வர்கள் பட்டம் பெற்றனர். தமிழ்ப் பல்கலைக்கழக துணை வேந்தர் கோ.பாலசுப்பிரமணியன், கல்லூரி செயலாளர் பழனியப்பா, கல்லூரி முதல்வர்(பொ) ஜான்சிராணி ஆகி யோர் கலந்து கொண்டனர்.