tamilnadu

img

சாலை பராமரிப்புப் பணியை தாரை வார்ப்பு ரூ.2 ஆயிரம் கோடி தனியார் லாபம் ஈட்ட உதவும் தமிழக அரசு

தஞ்சாவூர், ஜூலை 30- நெடுஞ்சாலைத் துறைப் பராமரிப்புப் பணியைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் கொள்கை முடி வைக் கைவிட வலியுறுத்தி, தஞ்சாவூர் பனகல் கட்டடம் முன் தமிழ்நாடு நெடுஞ் சாலைத் துறைச் சாலைப் பணியாளர் சங்கத்தினர் திங்கள்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழக அரசு நெடுஞ்சாலைத் துறை யை நீண்ட கால ஒப்பந்தத்தின்படி 5 ஆண்டுகளுக்குத் தனியார் நிறு வனத்திடம் வழங்குகிறது. மாநில, மாவட்ட முக்கியச் சாலைகளைத் தனி யார் நிறுவனங்களுக்குப் பராமரிப்புப் பணிகளுக்காக 5 ஆண்டுகளுக்கு ரூ.3,000 கோடியை கஜானாவில் உள்ள பணத்தை அரசு வழங்கி யுள்ளது. இந்தச் சாலைகளைச், சாலைப் பணியாளர்களைக் கொண்டு அரசே பராமரித்தால் ரூ.1,000 கோடியில் முடி யும். தனியார் நிறுவனங்கள் ரூ.2,000 கோடிக்கும் அதிகமாக லாபம் ஈட்ட அரசு வழிவகை செய்துள்ளது. எனவே,  நெடுஞ்சாலைத் துறைப் பராமரிப்புப் பணியைத் தனியாருக்கு வழங்கும் கொள்கை முடிவைக் கைவிட வேண்டும்.  தஞ்சாவூர் நெடுஞ்சாலை கோட் டத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலை மற்றும் மாவட்டச் சாலைகளைத் தனி யார் பராமரிப்பு முடிவைக் கைவிட்டு, சாலை பராமரிப்புப் பணியைத் தமி ழக அரசே ஏற்று நடத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.சந்திரசேனன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் வி.தம்பிஅய்யா, நெடுஞ்சாலைத் துறை ஊழியர் சங்க மாநிலப் பொதுச்செயலர் ஏ.ரெங்க சாமி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலர் ஆர்.பன்னீர்செல்வம், மாநிலத் துணைத் தலைவர் பி. கோதண்டபாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;