tamilnadu

img

பிரிவு உபசார விழா

தஞ்சாவூர், டிச.18- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரிவு உபச்சார விழா நடைபெற்றது.  செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவமல்லா மேற்பார்வையாளராக பணியாற்றி வரும் கண்ணன் பதவி உயர்வு பெற்று, தஞ்சாவூர் துணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் (தொழுநோய்) மாவட்ட நலக் கல்வியாளராக பதவி ஏற்க உள்ளார். இதையொட்டி, நடைபெற்ற வழி அனுப்பு விழாவிற்கு வட்டார மருத்துவ அலுவலர் சௌந்தர்ராஜன் தலைமை வகித்தார். பதவி உயர்வு பெற்றுச் செல்லும் கண்ணன் ஏற்புரையாற்றினார். நிகழ்ச்சியில், மருத்துவ அலுவலர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர், மருந்தாளுநர், கண் மருத்துவ நுட்பநர், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், அலுவலகப் பணியாளர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், மருத்துவமனை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.