tamilnadu

img

கும்பகோணத்தில் ரத்ததான முகாம்

கும்பகோணம், ஜன.28- நாச்சியார் கோவிலில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்  ஜாமியா மஸ்ஜித் ஜமாத்தார்கள் மற்றும் கும்பகோணம் ரோட்டரி ரத்த வங்கி சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது. தமுமுக கிளை தலை வர் நூருல் அமீன் வரவேற்புரை ஆற்றினார்.  தமுமுக மாவட்ட தலை வர் முகமது செல்லப்பா தலைமை வகித்தார். கிரசன்ட் பள்ளி பொருளா ளர் முபாரக் அலி மருத்துவ சேவை அணி செயலாளர் அப்துல் ஹாதில் முன்னிலை வகித்தனர். நாச்சியார்கோவில் ஊராட்சி தலைவர் மகேஸ்வரி உமாசங்கர், திருநறையூர் ஊராட்சி தலைவர் ரமாமணி காவல் ஆய்வாளர் ரேகா ராணி ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர். ரோட்டரி சங்க ரத்த வங்கி யின் தலைமை நிர்வாகி அப்துல் கபூர் பேசினார் முகாமில் 33வது தடவையாக நாச்சியார்கோவில்  உமாசங்கர் 15 ஆவது தடவையாக திருநரையூர் மணி 16 ஆவது தடவையாக தீக்கதிர் தஞ்சை மாவட்ட புகைப்பட செய்தியாளர் சரவணன் ஆகியோர் தொடர்ந்து ரத்த கொடை வழங்கினர்.  நிகழ்ச்சியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் நூருல் அமீன், பிரேம்நசீர், ஜெகபர் அலி, முகமது நிசார் உள்ளிட்ட ஆம்புலன்ஸ் சேவை பணி குழு வினர் ஏராளமானோர் ரத்த தானம் செய்தனர்.

;