tamilnadu

img

ஆக. 15- 17 தஞ்சாவூரில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாடு

தஞ்சாவூர், ஜூலை 4- தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மூன்றாவது மாநில மாநாடு ஆகஸ்ட் 15 - 17 தேதிகளில் தஞ்சாவூரில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்ட தலை வர்கள் பங்கேற்கின்றனர். இம்மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்காக தஞ்சாவூர் பெசன்ட் அரங்கில் புதன்கிழமை மாலை வரவேற்புக் குழு அமைப்புக் கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்திற்கு திரைப்பட இயக்குநர் ராஜூ முருகன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் கே. அபிமன்னன் வரவேற்றார். மாநில தலைவர் பி.சம்பத், பொதுச்செயலாளர் கே.சாமுவேல் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம், பாரத் கல்விக்குழுமச் செயலாளர் புனிதா கணேசன், ததீஒ முன்னணி மாநில துணை பொதுச் செயலா ளர்கள் எஸ்.கே.மகேந்திரன், டி. செல்லக்கண்ணு, சின்னை.பாண்டி யன், மாநிலக்குழு உறுப்பினர் பி.கந்த சாமி, மாநில மைய நிர்வாகி சிவகங்கை மு.கந்தசாமி, திருவாரூர் மாவட்டச் செயலாளர் தமிழ்மணி, வரவேற்புக் குழு பொருளாளர் ஆர்.புண்ணிய மூர்த்தி ஆகியோர் பேசினர்.  இம்மாநாட்டின் வரவேற்புக் குழு தலைவராக திரைப்பட இயக்குநர் ராஜூ முருகன் செயல்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ஆர்.வாசு, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வி,  தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச்செயலாளர் என்.வி. கண்ணன், சிபிஎம் தஞ்சை மாநகர செயலாளர் என்.குருசாமி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் கே.அரு ளரசன், மாணவர் சங்க மாவட்டச் செய லாளர் ஜி.அரவிந்த்சாமி, அரசு ஊழி யர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ. ரெங்கசாமி, தமுஎகச மாவட்டச் செயலா ளர் ஆர்.விஜயகுமார், காப்பீட்டுக் கழக தஞ்சைக் கோட்ட தலைவர் எஸ்.செல்வ ராஜ், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டச்செயலாளர் பி.எம்.இளங்கோ வன், எஸ்.புவனேசுவரி, கே.மதியழ கன், தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சஙக மாவட்ட செயலாளர் ஆர்.ராஜ கோபால், எஸ்.சி., எஸ்.டி., கமிஷன் அருட்தந்தை ஜான் அமலதாஸ், அன்னை வேளாங்கண்ணி கல்லூரி அருட்தந்தை ஜான் ஆரோக்கியதாஸ், சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநக ரத் தலைவர் ஹெச். அப்துல் நசீர் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.