தஞ்சாவூர் மாநகராட்சி கொரோனா தடுப்பு குறித்து பொது மக்களிடம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு, தஞ்சாவூர் மாநகராட்சியும், புனித ஆரோக்கிய அன்னை செவிலியர் கல்லூரியும் இணைந்து தயாரித்த “கோ கோ கொரோனா” என்ற விழிப்புணர்வு பாடல் ஒளி, ஒலி குறுந்தகடை மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ், வெளியிட, தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன் பெற்றுக் கொண்டார்.