tamilnadu

img

வி.தொ.ச மாநில நிர்வாகி மீது தாக்குதல்: கும்பகோணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், ஜூலை 7- தலித் சிறுவனை பூட்ஸ் காலால் எட்டி  உதைத்த கொடுமையை எதிர்த்து கேட்ட விவ சாய தொழிலாளர் சங்க மாநில துணை த்தலைவர் மலைவிளை பாசி மற்றும் அவ ரது மனைவி மீது பொய் வழக்கு போட்ட வடசேரி காவல் உதவி ஆய்வாளர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி அகில  இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில்  கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செய லாளர் கே.பக்கிரிசாமி தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் சி.நாகராஜன் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர். மனோக ரன், சின்னை.பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு விதொச  மாவட்டப் பொருளாளர் கே.அபிமன்னன் தலைமை வகித்தார். மாநில துணைத்த லைவர் எம்.சின்னத்துரை, மாவட்டத் தலைவர் ஆர்.வாசு ஆகியோர் கண்டன உரையாற்றினர்.