tamilnadu

img

ஜிஎஸ்டி வரி விதிப்பை கைவிடுக! எல்ஐசி ஊழியர்கள் கோரிக்கை

கும்பகோணம் செப்.29- கும்பகோணம் இன்ஸ்சூரன்ஸ் ஊழியர்கள் சார்பில் ஜிஎஸ்டி கவுன்சிலர் உறுப்பினர், தமிழக அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டது. அம்மனுவில் குறிப்பிட்டதாவது, ஆயுள் இன்ஸ்சூரன்ஸ் பிரிமியம் மீது ஜிஎஸ்டி விதிக்கப்படுவது சாதாரண மக்களுக்கான இன்ஸ்சூரன்ஸ் பரவலையும் சமூக பாதுகாப்பையும் பாதிக்கும். உலகத்தின் பல நாடுகளில் வளர்ந்த நாடுகள் உள்ளிட்டு இத்தகைய வரிவிதிப்பு ஆயுள் இன்ஸ்சூரன்ஸ் பிரீமியத்திற்கு இல்லை ஆயுள் இன்ஸ்சூரன்ஸ் தனிநபருக்கு சமூக பாதுகாப்பை வழங்கிட வேண்டும் இந்தியா போன்ற வளர்முக நாட்டில் பொருளாதாரத்திற்கும் ஆதார தொழில் வளர்ச்சிக்கும் பெரும் பங்களிப்பிற்கும் தேச நிர்வாகத்திற்கான பங்களிப்பின் மீது வரி விதிக்கப்படுவது சரி அல்ல இது நிதி திரட்டவும் பாதிக்கும். 2014 இல் 12 சதவீதமாக இருந்த சேவை வரி தற்போது 5 ஆண்டுகளில் 18 சதமாக உயர்த்தப்பட்டு இருப்பது பெரும் சுமையாக இருந்து வருகிறது ஆகவே ஜிஎஸ்டி விதிப்பு கைவிடப்பட வேண்டும் என்று கோரிக்கை சரியானது இதை பரிசீலிக்க வேண்டும் உடன் ஜிஎஸ்டி கவுன்சில் இப்பிரச்சினை குறித்து எடுத்துரைத்து வரிவிதிப்பை கைவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தது. மனுவில் கையெழுத்திட்டு கும்பகோணம் எல்ஐசி ஊழியர்கள் மற்றும் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ராமலிங்கம் திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினர் கோவி செழியன் ஆகியோர் ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினர் தமிழ்நாடு அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோருக்கு கோரிக்கை மனு அனுப்பி வைத்தனர்.