கும்பகோணம், மே 25- கும்பகோணம் நகராட்சி பகுதியில் வசிப்பவர்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் வலையப்பேட்டை நீரேற்று நிலையத்தில் வருகிற 26-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பராமரிப்பு பணிகள் செய்யப்படுகிறது. இதன் காரணமாக நகரத்தில் உள்ள 45 வார்டுகளை சேர்ந்த பொதுமக்களுக்கு மேற்குறிப்பிட்ட நாட்களில் குடிநீர் வினியோகம் நிறுத் தப்படுகிறது. எனவே பொது மக்கள் குடிநீரை சிக்கனமா கவும், சேமித்து வைத்தும் பயன்படுத்தி நகராட்சி பணிகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என கும்பகோ ணம் நகராட்சி ஆணையர் லட்சுமி தெரிவித்துள்ளார்.