tamilnadu

img

இந்தியா ஓபன் சர்வதேச குத்துச்சண்டை போட்டி : இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் மேரி கோம்

நடைபெற்றுவரும் இந்தியா ஓபன் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் பிரபல இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

மொத்தம் 16 நாடுகள் பங்கேற்றுள்ள இந்தியா ஓபன் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் 51கிலோ எடைப்பிரிவின் அரையிறுதியில் ஆறுமுறை உலக சாம்பியன் பட்டம் வென்ற பிரபல இந்திய வீராங்கனையான மேரி கோம் நிசாமாபத்தைச் சேர்ந்த வீராங்கனையான நிக்ஹத் சாரினை எதிர்கொண்டார். இப்போட்டியில் மேரி கோம் 4-1 என்ற சுற்றுக்கணக்கில் வெற்றி பெற்றார். மேலும், மேரி கோம் இன்று இரவு நடைபெறவுள்ள தங்கப்பதக்கத்திற்கான இறுதிப்போட்டியில் மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த வன்லால் துயட்டியை எதிர்கொள்ளவுள்ளார்.

மேலும், ஆடவர் பிரிவில் 10 எடைப்பிரிவுகளில் இந்திய வீரர்கள் இறுதிப்போட்டியை அடைந்துள்ளனர்.

;