tamilnadu

img

லேசர் பாய்மர படகு சாம்பியன்ஷிப் தமிழருக்கு வெண்கலம்

ஐரோப்பிய கண்டத்தின் மத்திய பகுதி நாடான குரோஷியாவில் கடந்த வாரம் (அக்.,30 - நவ., 2) நடைபெற்ற ஆடவருக்கான லேசர் பாய்மர படகுப்போட்டி (யு -21) நடைபெற்றது. இந்த தொடரில் இந்தியா சார்பில் களமிறங்கிய விஷ்ணு சரவணன் வெண்கலப்பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விஷ்ணு சரவணன் கடந்த ஆகஸ்ட் மாதம் போலந்து நாட்டில் நடைபெற்ற ஐரோப்பியன் சாம்பியன்ஷிப் தொடரில் வெண்கலப்பதக்கம் வென்ற முதல் ஆசிய வீரர் என்ற பெருமையை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.