tamilnadu

img

பகலிரவு ஆட்டமாக நடத்த பிசிசிஐ முடிவு

கொல்கத்தா டெஸ்ட் 

பெரும்பாலான நாடுகள் பகலிரவு டெஸ்டில் விளையாடி வருகின்றன. இந்திய அணி மட்டும் அதில் விருப்பம் இல்லையென தனிக்காட்டு ராஜாவாக ஒதுங்கி நிற்கிறது. ஐசிசி மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பலமுறை முயன்றும் இந்திய அணியை பகலிரவு டெஸ்ட் திட்டத்தில் விளையாட வைக்க முடியவில்லை. கிரிக்கெட் உலகின் தாதா கங்குலி பிசிசிஐ தலைவராக தேர்வுசெய்யப்பட்டுள்ள நிலையில் முதல் அதிரடியாக பகலிரவு டெஸ்ட் பற்றி தான் பேசியுள்ளார். இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டி நடத்தினால் மைதானத்தில் 100, 200 நபர்களே போட்டியை ரசிக்கின்றனர் எனக் கூறி பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு பச்சை கொடி காட்டினார்.  இந்நிலையில் வங்கதேசத்திற்கான டெஸ்ட் தொடர் நவம்பர் 14-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரின் 2-வது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நவம்பர் 22-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியிலிருந்து பகலிரவு டெஸ்ட் போட்டியை பிசிசிஐ முடிவு செய்துள்ளது. எனினும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் கொல்கத்தா பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு இன்னும் சம்மதம் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.