tamilnadu

img

சங்ககிரி அருகே குட்டையில் மூழ்கி சகோதரிகள் இருவர் பலி

சங்ககிரி அருகே குட்டையில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரிகள் இரண்டு பேர் பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
சங்ககிரியை அடுத்த வைகுந்தம் அருகே உள்ள காசிமாரியூர் காட்டு வளவு பகுதியைச் சேர்ந்த ரோடு ரோலர் ஓட்டுநர் ரமேஷ். இவரது மனைவி செல்வி. இவர்கள் கடந்த வாரம் தற்காலிகமாக வைகுந்தம் அக்ரஹாரம் பகுதியில் குடும்பத்துடன் குடியேறி வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு பிரியா (16),  துளசி (11) என்ற இரு பெண் குழந்தையும்,  சுரேஷ்(12) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் பெற்றோர்கள் இருவரும்  கூலி வேலைக்கு சென்ற நிலையில் பிரியா, துளசி இருவரும் வைகுந்தம் அக்ரஹாரம் பகுதியில் உள்ள குட்டையில் குளித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது எதிர்பாரதவிதமாக இருவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 
இது குறித்து சங்ககிரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இருவரின் சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.