tamilnadu

img

பெண் எம்.பி.,யை இழிவாகப் பேசிய பாஜக நிர்வாகியை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சேலம்,மே 21- பெண் நாடாளுமன்ற உறுப்பினரை இழிவாகப் பேசிய பாஜகவை சேர்ந்த கரு.நாகராஜனை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் நங்க வள்ளியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. காங்கிரஸ் கட்சியின் கரூர் நாடாளு மன்ற உறுப்பினர் ஜோதிமணியை, தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பாஜக நிர்வாகி கரு.நாகராஜன் இழி வாகப் பேசியதை கண்டித்து நங்கவள்ளி ஒன்றியத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட் டத்தில் மாவட்ட துணைத்தலைவர் கே. ராஜாத்தி, ஒன்றியச் செயலாளர் ஜி.கவிதா மற்றும் முண்ணணி ஊழியர்கள் உள் ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

;