சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், நங்கவள்ளி ஒன் றியம், சூரப்பள்ளி ஊராட்சி, பள்ளக்கனூரில் வசித்த வந்தவர் வெள்ளையன் (எ) பெருமாள் என்கிற விவசாயி. இவரின் விளைநிலத்தில் 800 KV உயர்மின்னழுத்த கோபுரமும், IDPL பெட் ரோல் குழாய் பதிப்பும் ஒருசேர வருகிறது. 2½ ஏக்கர் நிலமும் இனி சர்வநாசம். மா, தென்னை, பனை, பிய்யன், சீத்தா போன்ற மரங்கள் எல்லாம் வெட்டப்படுகிறது. இனி எந்த விவசாயமும் அந்த நிலத்தில் செய்ய முடி யாது. இந்த நிலமும் இருவருக்கும், இவரின் அண்ணனுக்கும் சொந்தமானது. ஆனால் இந்த நிலத்தின் இன்றைய மார்க்கெட் மதிப்போ ரூ1½ கோடிக்கும் மேல். இதை எல்லாம் பார்த்து விவசாயி எப்படி நிம்மதி கொள்வான். ஏற்கனவே உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு கட்டுப்படியான விலை யின்றி, மழை, வறட்சி போன்ற இயற்கை சீற்றங்கள், விவசாயம் செய்வதற்காக தனி யார் கந்து வட்டிக்கடன் முதல் கூட்டுறவு வங்கி வரையிலான கடன் தொல்லை போன்ற துயரங்களால் தினந்தோறும் செத்து, செத்து பிழைத்து வருகிறார்கள் கோடிக்கணக்கான விவசாயிகள். அன்று 1948 ஆம் ஆண்டு அன்றைய கந்துவட்டி சுரண்டலுக்கு தங்களது நிலத்தை பறித்துக்கொடுத்து, விரட்டி அடிக்கப்பட்ட கொடுமை நடந்தது. அத னால் ஊரைவிட்டு, நிலத்தை இழந்து கர்நாடக உள்ளிட்டு பல்வேறு பகுதிகளுக்கு பெயர்ந்து போனார்கள். அந்த விவசாயி களை எல்லாம் ஒன்று திரட்டி, செங்கொடி யேந்தி போராடி, இழந்த தங்களது ஆயி ரக்கணக்கான நிலங்களை மீட்டனர். அப் போரில் போலீசின் துப்பாக்கி குண்டுக்கு பலி யான வீரத்தியாகி சோரகை தியாகி பெரு மாள் மண்தான் இந்த மண். இந்த மண் ணில்தான் அதே பெருமாள் பெயரில் மற் றொரு பெருமாள் என்கிற விவசாயி, தன் விளைநிலத்தை அரசு பெயரில் கொள்ளைப் போவதைக்கண்டு, செய்வதறியாது, மனம் வெதும்பி விவசாயத்திற்கு வாங்கி வைத்தி ருந்த பூச்சிக்கொல்லி மருந்துக்கு தன்னு யிரை இரையாக்கிக் கொண்டார். ஆனால், இன்றைய மத்திய, மாநில அரசுகளுக்கு இது ஒரு பொருட்டே அல்ல. ஆம், ஒரு விவசாயி இறந்தாலோ, அல்லது ஒரு ஏழை எளியோர் திடீரென இறந்தாலோ கடன் தொல்லையால் இறந்தார் அல்லது குடும்ப பிரச்சனையால் இறந்தார் என முன் முடிவு அடிப்படையில் வழக்கை பதிவு செய்து ஊத்தி மூடி, உண்மையை மறைத்து விடுகிறார்கள். அப்படித்தான் விவசாயி பெருமாள் மரணத்தையும் முதல் தகவல் அறிக்கையில் (எப்ஐஆர்) பதிவு செய்து விட்டார்கள். ஆம், அரசு இயந்திரங்கள் என்று இதற்குத்தான் பெயர் சூட்டினார்களோ என்னவோ தெரியவில்லை. எந்தவித மனித குணமோ, மனிதாபிமானமோ, மனித நேயமோ துளியும் ் இல்லாமல் இருக்கிறது காவல் துறையும், வருவாய்த்துறையும். விவசாயி பெருமாள் தற்கொலை செய்ய காரணமாக இருந்தது முழுக்க முழுக்க பவர்கிரிட், வருவாய்த்துறை, காவல்துறை செய்த அராஜகமும், அநியாயமும்தான். விவசாயிகளின் சம்மந்தம் இன்றி, அவரது உயிருக்கு உயிரான விளைநிலத்தை எடுக்கிறபோது, மார்க்கெட் ரேட்டைக் கொடுத்தால் யார் குடிமூழ்கிவிட போகிறது? ஏன் அதை செய்ய மறுக்கிறது அரசுகள்? இந்த உயர்மின்னழுத்த திட்டத்தில் தனியார் பங்கு 53%, மத்திய மின்துறை பங்கு 47%. நிலத்தைக் கையகப்படுத்தவே அரசும் ஒரு பங்குதாரர். அவ்வளவுதான். திட்டப் பணி முடிந்ததும் அது முழுவதும் தனியார் கையில்தான். திருப்பூர் மாவட்டம் புதிய புகழூரில் இருந்து 3000 கிமீ தாண்டி சத்தீஸ் கர் மாநிலம் வரை இந்த தடம் போடப் படுகிறது. இந்த திட்டத்தில் ஒரு விவசா யிக்கே இவ்வளவு நட்டம் என்றால், இது போல் எத்தனை ஆயிரம் விவசாயிகள் வாழ்வு நிர்மூலமாக்கப்படுகிறது என்பதை மட்டும் எண்ணிப்பாருங்கள். இதிலே இன்னொரு கொடுமை என்ன வெனில், 1885 பிரிட்டிஷ் தந்தி கம்பம் நடும் சட்டத்தை வைத்துத்தான் இத்தனை ஆயிரம் மின் கோபுரங்களையும் அமைத்து வருகிறது. தமிழகமே பாகற்காய் பந்தல் போல் எங்கு பார்த்தாலும் மின்கோபுரங்கள் தான். ஒரு நாடு வளர்ச்சிக்கு எது இருக்கிறதோ இல்லையோ மின்சாரம் இருக்க வேண்டும் என்பார் மாமேதை லெனின். அப்படியான மின் உற்பத்திக்கோ, அதன் சார்ந்த தொழில் களுக்கோ விவசாயிதான் முதல் பலியாக வேண்டுமென்றால், அதைவிட ஒரு கொடுமை உலகில் வேறு எதாவது இருக்க முடியுமா? 800 KV உயர்மின்னழுத்த திட்டத்திற்கு எதிரான போராட்டத்தை தமிழ்நாடு விவ சாயிகள் சங்கமும், கூட்டு போராட்ட ஒருங் கிணைப்புக்குழுவும் இணைந்து கடந்த 3 ஆண்டுகளாக தீரமிக்க போராட்டங்களை நடத்தி வருகிறது. இதன் போராட்ட வடி வங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. காத்திருப்பு போராட்டம், சட்டப் போராட்டம் அவ்வள வும் செய்தாகி விட்டது. தொடர்ந்து செய்து கொண்டும் இருக்கிறது. சிறை கொட்டடி உள்ளிட்ட அனைத்து அடக்குமுறையை ஏவிவிட்டு வருகிறது மத்திய,மாநில அரசு கள். அத்தனை தடையையும் தாண்டி இந்த போராட்டம் நடந்துதான் வருகிறது. இந்த போராட்டங்களால் நட்ட ஈடு ஓரளவு உயர்ந்திருக்கிறது என்பது இதன் முதல் வெற்றியும்கூட. என்றாலும் கூட்டுக்குழு எழுப்பும் கோரிக்கையான, "சாலைவழியே புதை வடம் (கேபிள்) மூலம் கேரளாவைப்போல் கொண்டுசெல்; அமைத்த மின் கோபுரங்க ளுக்கு மாத வாடகை தந்திடு; நட்ட ஈடு சந்தை மதிப்பில் வழங்கவேண்டும்" போன்ற கோரிக்கைகளை தொடர்ந்து ஊதாசீனப் படுத்தி வருகிறது அரசும், பவர்கிரிட்டும். இதன் விளைவுதான் இன்று பெருமாள் என்ற விவசாயியின் விலைமதிப்பற்ற உயிரை குடித்து இருக்கிறது இத்திட்டம். இது 800 KV உயர்மின்னழுத்த திட்டத்தின் முதல் பலி என்றுதான் கூற தோன்றுகிறது. இது போன்ற உயிர்ப்பலி இனி நிகழாமல் இருக்க, விவசாயியின் மகன் எனக்கூறும் முதல்வர் இபிஎஸ் தலைமையிலான தமிழக அரசும், மத்திய மின்துறையான பவர்கிரிட் நிர்வா கமும் முன்வர வேண்டும். இத்தகைய விரும்பத்தகாத, சோகமான இந்த உயிர் பலியும்கூட முதல்வரின் சொந்தத் தொகுதி யில்தான், சொந்த மாவட்டத்தில்தான் நிகழ்ந்து உள்ளது. இபிஎஸ் இனியாவது கண்விழிப்பாரா? விவசாயிகளின் கோரிக் கைகளை நிறைவேற்றுவாரா? விவசாயி பெருமாள் உயிரே கடைசியாக இருக்குமா?
பி.தங்கவேலு, தவிச, சேலம் மாவட்டத்துணைத்தலைவர்