சேலம், மே 13 - ஏற்காடு மலைப்பாதையில் சர்க்கரை வியாபாரியின் ஐந்து லட்சம் ரூபாய் பணப் பையை குரங்குகள் தூக்கி சென்றதாக கூறப் படுவது தொடர்பாக மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார். சேலம் மாவட்டம், ஏற்காட்டை சேர்ந்த வர் அப்துல்லா. சர்க்கரை வியாபாரியான இவர், திங்களன்று தாரமங்கலத்தை சேர்ந்த முருகன் (28) என்பவரின் மினி லாரியில் சர்க்கரையுடன் ஐந்து லட்சம் ரூபாயை ஒரு பையில் கொடுத்து அனுப்பியுள்ளார். இவர்கள் சென்ற வாகனம் சோதனைச் சாவ டியை கடந்து செல்கையில், அங்கு பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் முருகேசன், பரமசிவம் மற்றும் மாதேஸ் ஆகியோர் மினி லாரியை சோதனை செய்து அனுப்பி வைத்துள்ளனர். இதன்பின்னர் முருகன் ஏற்காட்டுக்கு சென்ற நிலையில், பணம் வைத்திருந்த பை காணாமல் போனதாகத் தெரிகிறது.
இதை யடுத்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, ஏற்காடு காவல் ஆய்வாளர் ஆனந்தன், சோதனைச் சாவடியில் பணி யில் இருந்த காவலர்களிடம் விசாரித்துள் ளார். இதன்பின் ஊரக துணை காவல் கண்காணிப்பாளர் உமாசங்கர் விசாரணை நடத்தினார். இதில், பணப்பையை குரங்கு எடுத்து சென்றதாகவும், பையில் இருந்த பணக்கட்டுகளை குரங்கு வெளியில் தூக்கி வீசிய நிலையில், அந்த பணத்தை குரங்கி டம் இருந்து மீட்டு சோதனைச் சாவடி யில் வைத்ததாகவும், பணிமாற்றம் நிகழ்ந்த போது பணியில் இணைந்த காவலர்களிடம் இது சம்பந்தமாக தெரிவிக்க மறந்து விட்ட தாகவும் தெரிவித்தனர். இதனால் சந்தேகமடைந்த காவல் கண் காணிப்பாளர் உமாசங்கர், காவலர்கள் பணத்தை எடுத்துக் கொண்டு குரங்கு எடுத்துச் சென்று விட்டதாக தெரிவிக்கின் றனரா அல்லது உண்மையிலேயே பணப் பையை குரங்கு எடுத்துச் சென்றதா என்பது குறித்து சோதனைச் சாவடியிலுள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.