tamilnadu

img

குறைந்தபட்ச ஊதியத்தை உத்தரவாதப்படுத்த வலியுறுத்தி சிஐடியு டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

குறைந்தபட்ச ஊதியம் எட்டு மணிநேர வேலை உத்தரவாதப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சேலம் மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் சார்பில் கோரிமேடு தொழிலாளர் உதவி ஆணையாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 தமிழ்நாடு அரசு டாஸ்மாக்கில் பணியாற்றும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் எட்டு மணிநேர வேலை வழங்க வேண்டும் வார விடுமுறை அளிக்க வேண்டும்.

 மிகை நேர பணி நிலையான பணி நிரந்தரம் வழங்க வேண்டும்,வேலையாள் இழப்பீடு சட்டங்கள் போன்ற தொழிலாளர் நல சட்டங்களை அமல்படுத்த வேண்டும். 26000 ஊழியர்களின் உழைப்பு சுரண்டலை தடுத்து நிறுத்த வேண்டும்.

 தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்திற்கு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்திலிருந்து விதிவிலக்கு வழங்க வேண்டும், தேசிய பண்டிகை விடுமுறை சட்டத்திலிருந்து விதிவிலக்கு வழங்கவேண்டும், இஎஸ்ஐ மருத்துவத்திலிருந்து விதிவிலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத்தின் எஸ்.கே. தியாகராஜன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 இதில் மாவட்ட செயலாளர் கே.விஜயகுமார் மாநில துணைச் செயலாளர் டி. செல்வராசு,பொருளாளர் டி.ஆறுமுகம் துணை பொதுச்செயலாளர் எம். விஜயகுமார் உள்ளீட்டு சேலம் மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.