தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழு ஆய்வுக் கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழுவின் ஆய்வுக் கூட்டம் சட்டமன்ற உறுப்பினரும் குழுவின் தலைவருமான எஸ். ஆர். ராஜா தலைமையில் நடைபெற்றது. முன்னதாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய செயல்பாடுகள் குறித்து அமைக்கப்பட்டிருந்த அரங்கத்தை பார்வையிட்டனர். ஆய்வு கூட்டத்திற்கு வந்த உறுப்பினர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ். கார்மேகம் பொன்னாடை அணிவித்தும் புத்தகங்கள் வழங்கி கௌரவித்தார். நிகழ்ச்சியில் சட்டமன்றப் பேரவையின் பொது நிறுவனங்கள் குழு உறுப்பினர்கள் வி.பி.நாகை மாலி, கிருஷ்ணசாமி, ஆர்.டி. சேகர், நிவேதா எம். முருகன், எஸ். எஸ். பாலாஜி, ரூபி மனோகரன், எஸ் ஜெயக்குமார், குழுவின் சிறப்பு பணி அலுவலர் எம். எல். கே. ராஜா உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் பங்கேற்றனர்