tamilnadu

கருமந்துறை அரசு ஐ.டி.ஐ.யில் மாணவர் சேர்க்கை

சேலம், மே 19- கருமந்துறையில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.) 2019-ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு மே 31 ஆம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அதன் முதல்வர் ஆர்.ரங்கசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மின்சாரப் பணியாளர் (எலக்ட்ரிசியன்), பொருத்துநர் (ஃபிட்டர்), கம்மியர் மோட்டார் வண்டி (மெக்கானிக் மோட்டார் வாகனம்), குழாய் பொருத்துபவர் (பிளம்பர்), பற்ற வைப்பவர் (வெல்டர்) போன்ற பிரிவுகளில் சேர்ந்து பயில www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் மே 31 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பழங்குடியினப் பிரிவுக்குப் பயிற்சியாளர்கள் இல்லாத நிலையில் ஏற்படும் காலியிடத்துக்கு, மற்ற பிரிவினருக்குச் சேர்க்கை வழங்கப்படும். தமிழக அரசால் மாணவ, மாணவியருக்கு மாதம் ரூ.500 உதவித்தொகை, விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, சீருடையுடன் கூடிய தையற்கூலி, வரைபடக் கருவி, பாடப் புத்தகங்கள்,, கட்டணமில்லா பேருந்து வசதி ஆகிய சலுகைகள் வழங்கப்படும். கலந்தாய்வின் மூலம் சேர்க்கை நடைபெறும். மேலும் விவரங்களுக்கு ஐ.டி.ஐ. முதல்வரை நேரிலோ அல்லது 94435 48359, 94438 23985, 94434 57281, 99447 54242, 99947 77678 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளர்.