tamilnadu

img

வரி செலுத்துவதற்கு சிறப்பு முகாம்

சேலம், பிப்.16- சேலம் சூரமங்கலத்தில் மாநகராட்சிக்கு செலுத்த  வேண்டிய அனைத்து வரி இனங்களையும் செலுத்து வதற்கான சிறப்பு முகாமை மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் சனியன்று துவக்கி வைத்தார். சேலம் மாநகராட்சியின் சூரமங்கலம் மண்டலத் திற்குட்பட்ட பகுதி பொதுமக்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய அனைத்து வகையான வரி இனங்களையும் சிரம மின்றி செலுத்தும் வகையில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாம் சூரமங்கலம் மண்டல அலுவலக வளாகத்தில் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் துவக்கிவைத்தார். இந்த முகாமில் புதிய கட்டிடத்திற்கான சொத்துவரி, காலி வீட்டு மனை வரி மற்றும் குடிநீர் இணைப்பு, சொத்து வரி மற்றும் பெயர் மாற்றம், பாதாள சாக்கடை வைப்புத்தொகை, தொழில்வரி, கட்டிட வரைபட அனுமதி என்பன உள்ளிட்ட பல்வேறு வரி இனங்களுக்கான விண்ணப்பங்கள் பொது மக்களிடம் இருந்து பெறப்பட்டது.  மேலும் இம்முகாமில் பெறப்படும் அனைத்து விண்ணப் பங்களின் மீதும் பரிசீலனை செய்து ஏழு நாட்களுக்குள் உரிய ஆணை வழங்கப்படும் என மாநகராட்சி ஆணையர்  சதீஷ் தெரிவித்துள்ளார். இதில் சூரமங்கலம் பகுதியைச்  சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.