சேலம், பிப். 22- சேலம் மாநகரம் 22ஆவது வார்டில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மேற்கு மாநகரக் குழு சார்பில் கையெழுத்து இயக்கம் நடை பெற்றது. சேலம் மாநகரம் 22 ஆவது வார்டிற் குட்பட்ட சிவதாபுரம் பகுதியில் 35 ஆயிரத் திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சுகாதார வசதி முழுமையாக கிடைக்கவில்லை. இப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக சுமார் 8 கிமீ தொலை வில் உள்ள பொது மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே இப்பகுதியில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தர வேண்டு மென அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சேலம் மாநகர மேற்கு குழு சார்பில் பொது மக்களிடையே கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்த கையெழுத்து இயக்கத்தை மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஞானசௌந்தரி துவக்கி வைத்தார். இதில் மேற்கு மாதர் சங்க தலைவர் சமய வள்ளி, செயலாளர் வீ. தமிழரசி, பொருளாளர் லோகநாயகி உள் ளிட்ட மாதர் சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற் றனர். இதில் எண்ணற்ற மாதர் சங்க முன்னணி ஊழியர்கள் பங்கேற் றனர்.