சேலம், அக்22- வெளிநாடுகளில் இருந்து அதிகளவில் ஸ்டார்ச் இறக்குமதி செய்யப்படுவதை தடுக்க தமிழக முதல்வர் மூலம் மத்திய அர சுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என சேகோசர்வ் தலைவர் தமிழ்மணி தெரி வித்துள்ளார். சேலத்தில் சேகோ சர்வ் சிறப்பு பேரவை கூட்டம் வியாழனன்று நடைபெற்றது. இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த சேகோசர்வ் தலைவர் தமிழ்மணி கூறு கையில், தமிழகத்தில் ஜவ்வரிசி உணவு வகைகளை மதிய உணவு திட்டத்தில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது. வெளிநாடுகளிலிருந்து அதிகள வில் ஸ்டார்ச் இறக்குமதி செய்யப் படுவதை தடுத்து நிறுத்த தமிழக முதல் வர் மூலம் மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்கப்படும். மேலும் ஜவ்வரிசி உற் பத்தியில் கலப்படத்தை தடுக்க, அனைத்து ஆலைகளும் சிசிடிவி கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கபடுவதோடு, உற்பத்தி செய்யப்படும் ஜவ்வரிசி பொருட்கள் சேகோ சர்வ் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது சேகோ சர்வ் நிர்வாக இயக்குனர் சதீஸ், மேலாளர் ரவிக் குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.