tamilnadu

img

கோடநாடு வழக்கில் தொடர்புடைய கனகராஜ் வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவு

கோடநாடு வழக்கில் தொடர்புடைய மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ்  மரண வழக்கை மீண்டும் விசாரிக்க சேலம் மாவட்ட எஸ்.பி. அதிரடி உத்தரவிட்டுள்ளார்.    

சேலம் - ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் அடுத்த 5 தினங்களில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தென்னங்குடி பாளையம் என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது கார் மோதி உயிரிழந்தார்.

இது தொடர்பாக ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் கனகராஜ் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி மற்றும் உறவினர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர்.  

இந்நிலையில் கனகராஜ் மரணம் குறித்த வழக்கை ஆத்தூர் காவல்நிலைய போலீசார் மீண்டும் விசாரிக்க சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் உத்தரவிட்டார்.  

இதனை தொடர்ந்து கோடநாடு கொலை மற்றும் கொள்ளை குறித்து தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

;