tamilnadu

img

சேலம்: பள்ளி சென்ற 10ஆம் வகுப்பு மாணவருக்கு கொரோனா உறுதி!

சேலம், ஜன.21-
சேலத்தில் பள்ளிக்கு சென்ற 10ஆம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா நோய் தொற்று காரணத்தால் கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டு, இணைய வழியில் பாடம் கற்பிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் கல்வி  நிலையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.
இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் ஜன.19ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப் பட்டன.
இந்நிலையில், சேலம் மாவட்டம் தும்பல் ஊராட்சியில் பள்ளிக்கு சென்ற 10ஆம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

;