tamilnadu

img

ஜவுளி சுமைகளை ஏற்றுவதில் இடர்பாடு: லாரிகள் வேலை நிறுத்தம் - உற்பத்தியாளர்கள் வேதனை

இளம்பிள்ளை, நவ.7- ஜவுளி சுமைகளை லாரிகளில் ஏற்றுவதில் உள்ள இடர்பாடுகளை களைய வேண்டி மாநில லாரி உரி மையாளர்கள் சம்மேளனம் சார்பில் மூன்றாவது நாளாக 2 ஆயிரம் லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடு பட்டன. இதனால் ஜவுளி பொருட் கள் தேக்கமடைந்ததால் உற்பத்தியா ளர்கள் வேதனை அடைந்துள்ளனர். ஜவுளி சுமைகள் ஏற்றும் அனைத்து லாரி உரிமையாளர்கள் நலனை கருத் தில் கொண்டு ஜவுளி சுமைகள் ஏற்று பவர்கள் அரசு நிர்ணயித்த 3.8 மீட்டர் உயரம் 2.6 மீட்டர் அகலம் மற்றும் 12 மீட்டர் நீளமும் உள்ள ஜவுளி ரகங் களை ஏற்ற வேண்டும். ஆனால், இந்த அளவை கடந்து சுமை ஏற்றி செல்லும் லாரிகளுக்கு போக்குவரத்து துறை அதிகாரிகள் ரூ.20 ஆயிரம் வரை அபராதம் விதிப்பதால் லாரி உரிமை யாளர்கள் கடுமையாக பாதிக்கப் படுகின்றனர்.  

எனவே, இனி லாரிகளில் அரசு நிர்ணயித்த அளவிற்குமேல் ஜவுளி பாரத்தை ஏற்றக் கூடாது. தவிர்க்க முடியாத சூழ்நிலையில் சுமைகளை ஏற்றினால் விதிக்கப்படும் அபராத தொகையை சரக்கு அனுப்பியவர் தான் செலுத்த வேண்டும். லாரிகளில் ஏற் றும், இறக்கும் கூலியினை சரக்கு அனுப்பியவர்கள்  ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜவுளி பாரம் ஏற்றும் லாரி உரிமையா ளர்கள் வியாழக்கிழமை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக லாரி உரிமை யாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.10 கோடி வரை வருமானம் இழப்பு ஏற் பட்டுள்ளது.  

இந்த வேலை நிறுத்தத் தின் காரணமாக சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட  மாவட் டங்களில் ஜவுளிகள் ஏற்றுமதி செய் யப்படாமல் தேங்கும் அபாயத்தை எட் டியுள்ளதாக தமிழக லாரி உரிமையா ளர்கள் சம்மேளன தலைவர் குமார சாமி தெரிவித்துள்ளார். அதேநேரம், தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் தாக் கம் காரணமாக விதிக்கப்பட்டிருந்த பொதுமுடக்கத்தில் மெல்ல மெல்ல தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின் றன. தற்பொழுது பண்டிகை காலம் என்பதால் ஜவுளி தொழில் சூடுபிடிக்க தொடங்கி உள்ள நிலையில், லாரி உரி மையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட் டுள்ளதால் ஜவுளி உற்பத்தியாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்.