tamilnadu

img

பள்ளி கட்டிடத்தை சரி செய்திடுக மனுநீதி முகாமில் தலைமையாசிரியர் மனு

 ஏற்காடு, ஜூன் 29- ஏற்காடு பகுதியில் பழுதடைந்த பள்ளி கட்டிடத்தை சரி செய்யக்கோரி மனுநீதி முகாமில் தலைமையாசிரியர் மனு அளித்தார். சேலம் மாவட்டம், ஏற்காடு பகுதியில் உள்ள வேலூர் கிராமத்தில் வியாழனன்று வட்டாட்சியர் முருகேசன் தலைமையில் மனுநீதி முகாம் நடைப்பெற்றது. இம்முகாமில் பல துறை அதிகாரிகள் கலந்து கொண்டு தங்கள் துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மக்களிடம் விளக்கிக் கூறினர். இம்முகாமில் கலந்து கொண்ட வேலூர் கிராம மக்கள், தங்கள் கிராமத்தில் உள்ள பெரிய கிணறு தூர்வாரப்படாததால், தண்ணீர் பற் றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், அதனை தூர் வாற  வேண்டும் என்றும், ஏரி, குட்டைக்கு செல்லும் நீர்வழிப் பாதைகள் மண் நிரம்பியுள்ளதால் ஏரிக்கு சரியாக தண்ணீர் வருவதில்லை. எனவே அந்த ஏரியின் நீர் வழிப் பாதைகளை சீரமைக்க வேண்டும் என்றும் மனு அளித் தனர். இதையடுத்து வேலூர் ஊராட்சி ஒன்றிய பள்ளி  தலைமையாசிரியர் கலைச்செல்வன், வாக்குச்சாவடி யாகவும், பள்ளிக்கூடமாகவும் செயல்படும் பள்ளி கட்டிடம் பழுதடைந்துள்ளது. அதனை சீர்செய்யக்கோரியும், அக் கட்டிடம் அருகில் உள்ள மின்கம்பத்தின் கம்பிகள் மிகவும் தாழ்வாகவும் செல்வதால் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. எனவே, அக்கம்பத்தை அங்கிருந்து இடமாற்றம் செய்ய வேண்டும் என மனு அளித்தார்.