tamilnadu

இளம்பிள்ளை தபால் நிலையத்தில் ஜவுளி பார்சல்கள் வாங்க மறுப்பு

இளம்பிள்ளை, அக். 10-  இளம்பிள்ளை தபால் நிலையத்தில் ஊழியர்கள் பற்றாக் குறையால் ஜவுளி பார்சல்களை வாங்க மறுப்பதால் வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர். சேலம் மாவட்டம், இளம்பிள்ளை மற்றும் அதனை சுற்றி யுள்ள பகுதிகளில் ஜவுளி உற்பத்தி பிரதான தொழிலாக  இருந்து வருகிறது. தற்போது, கொரோனா நோய்த் தொற்று காரணமாக ஆன்லைன் மூலம் அதிக அள வில் சேலைகள் விற்பனை செய்யப்பட்டு வரு கிறது. இதனை அரசு தபால் சேவை மற்றும் தனியார்  பார்சல் நிறுவனங்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு  அனுப்பி வைக்கின்றனர். இதன் காரணமாக தனி யார் கொரியர் நிறுவனங்களில் கூட்டம் அலைமோதி  வருகின்றனர். இதன் காரணமாக இரவில் நீண்ட  நேரம் வரை பணியாற்றும் சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப் பாக, இளம்பிள்ளை  தபால்நிலையத்தில் நாளொன்றுக்கு  500 க்கும் மேற்பட்ட பார்சல் தபால்கள் அனுப்பப டுகின்றன.  இந்நிலையில் இளம்பிள்ளை அருகே உள்ள தப்பட்டை  பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் பார்சல் அனுப்ப இளம்பிள்ளை தபால் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

அப் போது அங்கு பணிபுரியும் பணியாளர்கள் தபால்கள் அனுப்ப முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளார். இத னால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடு பட்டனர்.  இதுகுறித்து தபால் அலுவலகத்தில் பணிபுரியும்  ஊழியர்கள் கூறுகையில், எங்களது நிலையத்தில் ஆட்கள் குறைவாக இருப்பதால் வேலைப்பளு அதிக மாக இருந்து வருகிறது. இதனால் சரியான நேரத்தில்  தபால்களை பெற்று அனுப்ப முடியவில்லை என தெரி வித்தனர். அதேநேரம், தபால்துறை அதிகாரிகள் ஆய்வு  செய்து தேவைக்கு ஏற்ப உடனடியாக ஊழியர் களை பணி நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.