tamilnadu

மின்மாற்றி பழுதை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை

இளம்பிள்ளை, ஜூலை 19- இடங்கணசாலை அருகே பழுதுடைந்த மின்மாற்றியை சரி செய்ய அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.  சேலம் மாவட்டம், இடங்கணசாலை கிராமம், மாட்டை யாம்பட்டி, வாழக்குட்டை ஆகிய பகுதியில் 100 க்கும் மேற் பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், இப்பகுதியிலுள்ள மின்மாற்றி (ட்ரான்ஸ்ஃபார்மர்) பழுத டைந்து 10 நாட்களுக்கும் மேலாகியும் சரி செய்யப்படாமல் உள்ளது.

இதனால், அப்பகுதியின் பிரதான  விசைத்தறி கூடங்கள், விவசாய மோட்டார்கள் என மின்சாரத்தைச் சார்ந்த பொருள்கள் இயக்க முடியாமல் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்கால அடிப்ப டையில் நடவடிக்கை மேற்கொண்டு சரி செய்திட வேண்டு மென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;