tamilnadu

img

100 நாள் வேலை கேட்டு அக்.6-ல் அனைத்து பேரூராட்சிகளிலும் போராட்டம் விவசாயத் தொழிலாளர் சங்கம் அறிவிப்பு

சேலம், செப். 25- 100 நாள் வேலை கேட்டு அக்.6 ஆம் தேதியன்று சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பேரூராட்சிகளிலும் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்துவது என விவசாயத் தொழிலாளர் சங்கம் அறிவித்துள்ளது. அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சிறப்புப் பேரவைக் கூட்டம் சேலம் விபிசி நினைவகத்தில் மாவட்டத் தலைவர் வீ.தங்கவேல் தலைமையில் நடை பெற்றது. இதில், மாநில பொதுச்செயலாளர் வி.அமிர்த லிங்கம், மாநில துணைத்தலைவர் துரைசாமி, மாவட்டச் செயலாளர் ஜி.கணபதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  இக்கூட்டத்தில், சேலம் மாவட்டத்தில் உள்ள 33 பேரூ ராட்சிகளிலும் அக்.6ஆம் தேதியன்று 100 நாள் வேலை கேட்டு போராட்டத்தில் ஈடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், விவசாயத்திற்கு எதிராக மத்திய அரசு செயல்படுத்த நினைக்கும் விவசாய விரோத சட்டங்களை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

;