சேலம், பிப்.12- சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடியில் உள்ள ஆர்.கே. திருமண மண்டபத்தில் வருகின்ற சனியன்று இளைஞர்களுக்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் கூறி உள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரி வித்துள்ளதாவது, சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் / தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் DDU-GKY திட்டத்தின் கீழ் 2018-2019ஆம் ஆண்டிற்கான, இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு வேலைவாய்ப்பு அளித் திடும் வகையில் வருகிற சனியன்று காலை 10 மணியளவில் சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி வட்டாரத்தில் உள்ள ஆர்.கே. திருமண மண்டபத்தில் தனியார் நிறுவ னங்கள் மூலம் வேலைவாய்ப்பு முகாம் நடை பெற உள்ளது. இதில் அனைத்து இளைஞர்கள் மற்றும் மகளிர் கலந்து கொள்ளலாம். இவ்வேலை வாய்ப்பு முகாமில் 8-ஆம் வகுப்பு முதல் பட்ட மேற்படிப்பு மற்றும் தொழில்நுட்ப கல்வித் தகுதி பெற்ற இளைஞர்கள் (ஆண்/பெண் இருபாலர்) கலந்து கொள்ளலாம். இம் முகாமில் கலந்து கொள்ளுபவர்கள் கல்விச் சான்றிதழ் நகல், குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை நகலுடன் தங்களுக்கேற்ற வேலைவாய்ப்பினை தேர்வு செய்து கொள்ளலாம். இம்முகாமில் பல்வேறு தனி யார் நிறுவனங்கள், தங்களுக்குத் தேவை யான நபர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். எனவே, வேலைவாய்ப்பு பெற விரும்பும் நபர்கள் (ஆண்/பெண்) தவறாது இதில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு திட்ட அலு வலர், மகளிர் திட்டம், அறை எண். 207, மாவட்ட ஆட்சியரகம், சேலம் மாவட்டம் என்ற முகவரியில் செயல்படும் மகளிர் திட்ட அலுவலகத்தை நேரிலும், 0427-2411552 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.