tamilnadu

img

அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுநர்கள் காலிப்பணியிடங்களை நிரப்பிடுக சேலத்தில் அனைத்து மருந்தாளுநர்கள் உண்ணாவிரதம்

சேலம், ஆக. 29- நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருந்தாளுநர் பணியிடங்களை உருவாக்க வலியுறுத்தி சேலத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கம் சார்பில் வியாழனன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.  தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 700க்கும் மேற்பட்ட மருந்தாளுநர் பணியிடங்களை உடன டியாக நிரப்பிட வேண்டும்.  பதவி உயர் வில் உள்ள தேக்கநிலையை போக்கிட  வேண்டும். 32 மாவட்ட மருந்து கிடங் குகளில் பணியாற்ற அலுவலர் பணியிடம் உருவாக்க வேண்டும். காசநோய் பிரிவில் பணியாற்றும் மருந்தாளுநர்களுக்கு மற்ற பிரிவினருக்கு வழங்குவதை போல் ஒரு மாதம் கட்டாய விடுப்பு வழங்க வேண் டும். பழிவாங்கும் நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் தற்காலிக பணி நீக்க உத்தரவை ரத்து செய்து சமூக சூழலை உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக் கைகளை முன்வைத்து தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கம் சார்பில் வியாழனன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.  இப்போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.சுகுமார் தலைமை வகித்தார். இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர் ஏ.அன்புதுரை, கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் என்.அன்பு துரை,  நீலகிரி மாவட்ட தலைவர் ஜாம்சன் செல்வ குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   மாநில செயலாளர் எம்.முத்துக்குமரன், மாநில தணிக்கையாளர் கே.எ.பசுபதி, சேலம் மாவட்ட செயலாளர் கே.கிரிராஜன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் இ.கோவிந்தராஜ், மாவட்ட தலைவர் சி.முருகப்பெருமாள், மாவட்ட துணைத் தலைவர் சி. கே.ராமச்சந்திரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் எஸ்.தமிழ்செல்வி உண்ணாவிரதத்தை நிறைவு செய்து பேசினார். முடிவில் மாவட்ட பொருளா ளர் ஆர் .கேசவகீர்த்தி நன்றி உரையாற்றி னார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மருந் தாளுநர்கள் பங்கேற்றனர்.