tamilnadu

img

இளம்பிள்ளை அருகே பட்டதாரி மாணவன் படுகொலை - மூவர் கைது

இளம்பிள்ளை, ஆக. 9- இளம்பிள்ளை அருகே பட்டதாரி மாணவன் கடத்தி செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மூன்று இளை ஞர்களை காவல் துறையி னர் கைது செய்தனர். சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அடுத்த நல் லண்ணம்பட்டி  பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி செல் வம் மகன் பூபாலன் (24). எம்.ஏ. பட்டதாரியான இவர் தற்சமயம்  அரசுத் தேர்வு எழுதுவதற்காக இளம்பிள் ளையில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் சக நண்பர்களு டன் சேர்ந்து பயிற்சி பெற்று வருகிறார்.

இந்நிலை யில், பூபாலன் ஆக.7ஆம் தேதியன்று வெகு நேரமாகி யும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த பெற்றோர், உறவினர்கள்  மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்புகாரின் பேரில் மகுடஞ்சாவடி காவல்  நிலைய ஆய்வாளர் சசிகுமார் தலைமையில் தீவிர விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலை யில், ஞாயிறன்று பெருமாகவுண்டம்பட்டி அருகே உள்ள மங்கரடு பகுதியில் சந்தேகிக்கபடும் நிலையில் நின்றிருந்த காரின் உள்ளே பார்த்ததில் காணாமல் போன பூபாலன் உடலை பிணமாக காவல் துறையினர் மீட்டனர்.

பின்னர் பிரேதப் பரி சோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக நல்லம்பட்டி காட்டுவளவு பகுதியைச் சேர்ந்த கந்தசாமி மகன் ஏழுமலை (29), பழனி மகன் ஜெகன் (21), பரமகவுண் டனூர்  பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் சத்திய மூர்த்தி (26) ஆகிய மூன்று இளைஞர்களை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து கார், இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

;