tamilnadu

img

மாமேதை மார்க்ஸ் சிலையை பிரகாஷ்காரத் திறந்து வைத்தார்

மனித குலத்தின் விடியல்  மாமேதை கார்ல் மார்க்ஸ் அவர்களின் வெண்கல சிலையை சேலம் சிபிஎம் மாவட்டக்குழு அலுவலகமான சேலம் சிறைதியாகிகள் நினைவரங்க வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் மார்க்ஸ் சிலையை திறந்துவைத்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு துவக்க விழா நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சி எருச்சியோடு கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக சேலத்தில் மனித குலத்தின் விடியலுக்கான வழிகாட்டி மாமேதை காரல் மார்க்ஸ் சிலை திறப்பு விழா பொதுக்கூட்டம் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

கட்சியின் ச சேலம் மாவட்ட செயலாளர் பி. இராமமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். வெங்கடபதி வரவேற்புரையாற்றினார்.
கட்சியின் தமிழ் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே. தங்கவேல் பி. செல்வ சிங் மாநில குழு உறுப்பினர் ஏ .ராதிகா, தர்மபுரி மாவட்ட செயலாளர் ஏ. குமார், ஈரோடு மாவட்ட செயலாளர் ஆர். ரகுராமன், கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் எஸ். ஆர் .ஜெயராமன், நாமக்கல் மாவட்ட செயலாளர் எஸ். கந்தசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
 மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி. உதயகுமார் நன்றி உரையாற்றினார். முன்னதாக இந்நிகழ்சியில் காஞ்சிபுரம் புது வினை தப்பாட்டம் கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறறது.

;