tamilnadu

லாட்டரி சீட்டு விற்பனை - இருவர் கைது

இளம்பிள்ளை, பிப். 4-  இளம்பிள்ளையில் விசைத்தறி தொழிலாளர்களை குறி வைத்து தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த இருவரை காவல் துறையினர் கைது செய்து சிறை யில் அடைத்தனர்.  சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி காவல் நிலையத் திற்கு உட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப் பட்ட வெளி மாநில ஆன்லைன்  3ஆம் எண் லாட்டரி சீட்டு களை விசைத்தறி தொழிலாளர்கள் நிறைந்த இப்பகுதியில் ஒரு நாளைக்கு பல லட்சம் ரூபாய்க்கு மேல் விற்பனை நடை பெற்று வருவதாக தொடர் புகார் எழுந்தது. இதனை யறிந்த மகுடஞ்சாவடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் பெரியசாமி உள்ளிட்ட காவல் துறையினர் செவ்வாயன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது  பெருமாகவுண் டம்பட்டி பகுதியைச் சேர்ந்த பிரபல லாட்டரி சீட்டு வியா பாரியான தேவராஜ் மகன்  ஆறுமுகம் (49) என்பவரும், இளம் பிள்ளை குருநாதசுவாமி கோயில் பகுதியைச் சேர்ந்த சுப்பி ரமணியன் மகன் செல்வராஜ்(50) என்பவரும்  அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்து வந்துள்ளனர். இதனையடுத்து அவர்களை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.மேலும், இளம்பிள்ளை, மகுடஞ்சாவடி, பெருமாகவுண்டம்பட்டி, தப் பகுட்டை, கே.கே.நகர், காடையாம்பட்டி, புளியம்பட்டி இடங்கணசாலை உள்ளிட்ட பகுதிகளில் தடைசெய்யப் பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வரும் மர்மந பர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.